சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படக்காரர் சுப.மோகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மோகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். மேட்டூர் திறப்பு உள்ளிட்ட முதல்வர் நிகழ்ச்சியை படம் எடுப்பதற்காக சேலம் சென்ற இடத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.